நான்கு நாள் பயணமாக வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா திங்களன்றுகாலை தில்லி வந்தடைந்தார். இந்த பயணத்தின்போது, புதிதாக பதவியேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வா்த்தக உறவை விரிவுபடுத்துதல், மின்சாரம் மற்றும் எரிபொருள் துறையில் ஒத்துழைப்பு, எல்லை மேலாண்மை, போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.