world

img

எம்62 ரயில் எஞ்சின் அல்ல; மக்கள் எஞ்சின் - எஸ்.பி.ராஜேந்திரன்

மேற்கு ஆப்பிரிக்காவில் நடப்பது என்ன?

நைஜரின் புதிய ராணுவ ஆட்சியாளர்கள் தங் களை ஒரு ‘புரட்சிகர அரசு’ என்று அறிவித்து 21 பேர் கொண்ட அமைச்சரவையையும் நியமித்துள்ளனர். அந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரான்சின் கைப்பாவை அல்லாத அரசு அமைந்திருக்கிறது என்று மீண்டும் பொது மக்கள் வீதிகளில் வந்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதிகாரத்திலிருந்து ராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி முகமது பஜுமை  ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தாவிட்டால் போர் தொடுக்க நேரிடும் என்று பிரான்சின் குரலை எதிரொலித்தது ‘மேற்கு ஆப்பிரிக்க பொருளாதாரக் கூட்ட மைப்பு’ எனும் மேற்கத்திய ஆதரவு அமைப்பு. ஆனால் அதற்கு செவிசாய்க்க முடியாது என  நைஜரின் புதிய ஆட்சியாளர்கள் அறி வித்ததைத் தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தன பிரான்சும் அதன் தொங்கு சதையான மேற்கண்ட அமைப்பும். மேலும் ஒருவார காலம் அவ காசம் கொடுக்கிறோம் என்று அறிவித்து தற்காலிகமாக தங்களது குழப்பத்தை தணித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்

நைஜீரியாவில் எதிர்ப்பு

‘ஈகோவாஸ்’ (ECOWAS) எனப்படும் மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார கூட்டமைப்பின் தலைவராக தற்போது நைஜீரியா இருக்கிறது. நைஜீரியாவின் ஜனாதிபதி போலா தினுபு,  நைஜர் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என்ற பிரான்சின் திட்டத்தை, நைஜீரிய நாடாளுமன்ற செனட் சபையில் முன் வைத்திருக்கிறார். மூடிய அறையில், ஆகஸ்ட் 5 அன்று நடந்த நைஜீரிய செனட் சபைக் கூட்டத்தில் அவரது கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் ஜனாதிபதி தினுபுவை கிட்டத்தட்ட பந்தாடியிருக்கிறார்கள் என்றே கூறப்படுகிறது. நைஜர் மீது ராணுவத் தாக்குதல் நடத்தும் திட்டத்திற்கு நைஜீரியா ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என ஜனாதிபதியைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் கடுமையாக பேசியிருக்கிறார்கள். இது அந்நாட்டிலிருந்து வெளிவரும் ‘பிரீமியம் டைம்ஸ்’ ஏட்டிற்கு நைஜீரிய செனட் உறுப்பினர் ஒருவர் அளித்த பேட்டியின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. மேற்கண்ட ஈகோவாஸ் அமைப்பில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. பெனின், புர்கினோ பாசோ, கேப் வெர்தே, கோட் டெலவோர், காம்பியா, கானா, கினி, கினி பிசாவு, லைபீரியா, மாலி, நைஜர், நைஜீரியா, செனகல், சியாரா  லியோன் மற்றும் டோஜோ ஆகிய நாடுகளே  அவை.  இவற்றில் பரப்பளவில் 60சதவீதத் திற்கும் அதிகமாக உள்ள மாலி, நைஜர், கினி  மற்றும் புர்கினோ பாசோ ஆகிய நாடுகளில் ராணுவங்களில் உள்ள புரட்சிகரக் குழுக்கள், பிரான்ஸ் ஏகாதிபத்திய கைக்கூலி களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிய காரணத்தால், ஈகோவாஸ் அமைப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள் ளன. எஞ்சியுள்ள 11 நாடுகளின் பிரதிநிதிகள் தான் ஜூலை 30 அன்று கூட்டம் நடத்தி, பிரான்சின் உத்தரவைக் கேட்டிருக்கிறார்கள். உடனடியாக ராணுவத் தாக்குதல் நடத்துமாறு  பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுதந்திர நாடுகள் ஆன போதிலும் இன்னும் பிரான்சிடம் உத்த ரவு கேட்கும் அடிமைத்தனத்திற்கு இந்த நாடு களிலேயே தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நைஜர் மீது கை வைக்காதே!

நைஜீரியாவின் செனட் உறுப்பினர்கள் பதிலடி கொடுத்தது போலவே பெனின் ஜனாதி பதிக்கும் பெனின் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தொழிலாளர் இயக்கங்கள், நைஜர் மீது கைவைக்காதே என்று கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.  இந்த அமைப்பில் கவுரவ உறுப்பினராக உள்ள சாட் நாட்டின் ஜனாதிபதி, ராணுவ ஆட்சி யாளர்கள் மீண்டும் முகமது பஜுமை ஜனாதி பதியாக்க வேண்டும் என்று கூறியுள்ள அதே வேளையில், நைஜர் மீது ராணுவ நட வடிக்கை மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மிக முக்கிய அண்டை நாடும் ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளில் ஒன்று மான அல்ஜீரியா, ராணுவக் கிளர்ச்சி கைவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ள அதே வேளையில் நைஜர் மீது வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், அது தற்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும் கூறியுள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பல்வேறு  நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழி லாளர் இயக்கங்கள், நைஜர் மீது ராணுவத்  தாக்குதல் நடத்தும் ஏகாதிபத்திய அச்சுறுத்த லை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும், தற்போது ஏற்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடு களின் இளைஞர்களது எழுச்சிகர உணர்வு களைக் கருத்தில் கொள்ளாமல் ராணுவத் தாக்குதல் என்ற தவறை ஏகாதிபத்திய சக்திகள் செய்யுமானால் மிகக் கடுமையான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் கைக்கூலிகளுக்கும் மிகப்பெரிய பாடம் கற்பிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கென்யா கம்யூனிஸ்ட் கட்சி, மொரோக்கோ தொழிலாளர் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் ராணுவமே, வெளியேறு!

நைஜரில் பிரான்ஸ் ராணுவம் 1,500க்கும் மேற்பட்ட துருப்புக்களை நிலைநிறுத்தியுள் ளது. அதேபோல அமெரிக்கா 1100 துருப்புக் களை வைத்துள்ளது. மொத்தத்தில் இந்த இரண்டு ஏகாதிபத்திய சக்திகளும் மூன்று ராணுவ முகாம்களை 1960லிருந்து நைஜரில் நிலைநிறுத்தியுள்ளன. சுதந்திர நாடான நைஜரில் முகாமிட்டுள்ள அந்நிய ராணுவப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என நீண்டகாலமாக போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறையும் அந்தப் போராட்டத்தை பிரான்ஸ் ஆதரவு ஆட்சியாளர்கள் கொடூரமாக ஒடுக்குவதே வழக்கம். அப்படித்தான் 2021 ஏப்ரலில் பிரான்ஸ் ஆதரவாளரான முகமது பஜும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். மிகப் பெரிய ஜனநாயகவாதி என்று பிரான்ஸ் எஜ மானர்களால் புகழப்பட்ட பஜும், அதி காரத்திற்கு வந்த உடனே இணைய தள தடை யை அறிவித்தார். இளைஞர்களின் போராட்டங் களின் மீது கொடூரமான தாக்குதல்களை -ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் முக்கியமானது, ராணுவ முகாம்களைத் தாண்டி நகருக்குள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ராணுவத் துருப்புக்கள் வரக் கூடாது என்பதற்கான இயக்கங்களே.

இந்த நிலையில் 2022ல்  அண்டை  நாடான மாலியில் பிரான்ஸ் ராணுவத்தின ருக்கு எதிராகவும் பிரான்ஸ் ஆதரவு ஆட்சி யாளருக்கு எதிராகவும் ராணுவக் கிளர்ச்சி  நடந்த பின்னணியில், அங்கு ஒடுக்குமுறை யை நிகழ்த்தும் நோக்கத்துடன் ஆப்பிரிக்க கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஐவரி  கோஸ்ட் வழியாக மாலிக்கு செல்வதற்காக பிரான்ஸ் ராணுவப் படைகள் நைஜருக்குள் நுழைந்தன. நைஜர் இளைஞர்கள் கொதித் தெழுந்தனர். எங்கள் நாட்டின் வழியாக பிரான்ஸ் படைகள், மாலியில் உள்ள எங்களது சகோதரர்களை ஒடுக்குவதற்கு செல்ல அனு மதியோம் என்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அந்த இளைஞர்கள் மீது நைஜர் ஜனாதி பதியின் தனிப்படையினரும் பிரான்ஸ் ராணு வத்தினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நைஜர் மக்களிடையே ஆத்திரத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியது. அதேவேளையில் மாலியில் ராணுவக் கிளர்ச்சியாளர்கள் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி அங்கிருந்து 2400 ராணுவத் துருப்புகளையும் திரும்பப்பெற்றுக்கொள்வதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அறி வித்தார். அப்போது அவர் சொன்னார்: “சாஹேல் பிரதேசத்தில் (மேற்கு ஆப்பிரிக்கா வின் பெயர் சாஹேல்) இனி பிரான்ஸ் ராணுவத்தின் இதயமாக இருக்கப்போவது மாலி அல்ல; நைஜர்”. இந்த வார்த்தைகள் நைஜர் மக்களை மேலும் கொதிப்படையச் செய்தன. அப்போது பிறந்தது ‘எம் 62’ (M62) இயக்கம். 2022 ஆகஸ்ட் இறுதியில் நைஜரின் 14 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ‘நைஜர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 15 குடிமை அமைப்புகள் ஒன்றாக இணைந்து உதய மானது எம்62 இயக்கம். இதன் ஒற்றை முழக்க மாக எழுந்தது, “பிரான்ஸ் ராணுவமே, நைஜரி லிருந்து வெளியேறு!”.

எம்62 பற்ற வைத்த நெருப்பு

எம்62 என்பது, முன்பு சோவியத் ஒன்றியம்  உலகையே பிரமிக்கச் செய்யும் விதத்தில் வடிவமைத்த அதிவேக ரயில் என்ஜினின் பெயர் ஆகும். ஒன்றல்ல, இரண்டல்ல, அந்தக்  காலக்கட்டத்தில் ஒரே நேரத்தில் 5ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ரயில் என்ஜின்களை அதிவேகமாக உற்பத்தி செய்து, ஆப்பிரிக்க கண்டத்தின் சில நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து உலகையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது சோவியத் ஒன்றியம்.  அந்த என்ஜினின் பெயரை தற்போது, பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட இயக்கத்திற்கு தேர்வு செய்தனர் நைஜர் மக்கள். அன்று துவங்கிய எழுச்சி நைஜர் மக்கள் மனதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை கனன்று எரியச் செய்தது. எம் 62 இயக்கம் பற்ற வைத்த தீ தான், அந்நாட்டு ராணுவத்தில் உள்ள இளைஞர்களையும் ஈர்த்தது. அதுவே இன்று பிரான்ஸ் கைக்கூலி அரசுக்கு எதிரான  ராணுவக் கிளர்ச்சியை நடத்தியுள்ளது. அந்த எழுச்சியே, புரட்சிகர அரசு என்று அறிவிக்கச் செய்துள்ளது. 1977 லிருந்து பிரான்சுக்கும் நைஜருக்கும் இடை யில் இருந்த அனைத்து ராணுவ ஒப்பந்தங் களையும் ரத்து செய்வதாக அறிவிக்கச் செய்துள்ளது. ராணுவத் தாக்குதல் நடத்துவோம் என்ற ஏகாதிபத்தியத்தின் மிரட்டலுக்கு மக்களைத் திரட்டி பதிலடி கொடுத்ததன் பின்னணியிலும் எம்62 என்ற மாபெரும் மக்கள் இயக்கமே இருக்கிறது. இந்த இயக்கத்தில் இணைந்து ள்ள இளைஞர்களின் டி-சர்ட்டுகளில் சிரித்துக் கொண்டிருக்கிறார் மேற்கு ஆப்பிரிக்க இளை ஞர்களின் கதாநாயகனாக ஒரு காலத்தில் வலம் வந்த சின்னஞ்சிறு இளைஞன், கம்யூ னிஸ்ட் எழுச்சி நாயகன், ‘ஆப்பிரிக்காவின் சேகுவேரா’ தோழர் தாமஸ் சங்காரா!