world

img

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே கடந்த 7-ஆம் தேதி மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகின. தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக பல கிராமங்கள் தரைமட்டமாகி, 2400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அதே ஹெராத் நகருக்கு 28 கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. இதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே ஏற்பட்டுள்ள நிலநடுக்க பாதிப்பில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீண்டும் வராத நிலையில், மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.