கிரீசிலும் எதிர்ப்பு
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அன்டோனி பிளின் கென்னின் வருகைக்கு ஐரோப்பிய நாடு களில் ஒன்றான கிரீசில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தங்களைப் போருக்குள் இழுத்துவிட வேண்டாம் என்று வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஏதென்ஸ் நகர சாலைகளில் மக்கள் வலம் வந்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தந்திருந்தது. அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்கள்.
வார்சா, பிப்.24- அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்குள் ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியுள்ள தால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றும், நேட்டோவில் உறுப்பு நாடாகவும் இருக்கும் ஹங்கேரி தொடர்ந்து உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா வின் நிலைபாட்டுக்கு மாறான கருத்தைக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் “சிறப்பு ராணுவ நடவடிக்கை” தொடங்கியவுடன், பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தது. அந்தத் தடைகளை ஐரோப்பிய நாடுகளும் விதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. பல ஐரோப்பிய நாடுகள் அந்த மிரட்டலுக்குப் பயந்து தடைகளை விதித்தன. இந்தத் தடைகளால் ரஷ்யாவுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, தடையைப் போட்ட நாடுகள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் இந்தத் தடைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு, உக்ரை னுக்கு ஆயுதங்களை அனுப்பத் தங்கள் நிலப்பகுதியையோ அல்லது வான்பகுதியையோ பயன்படுத்தக்கூடாது என்றும் கூறிவிட்டது. அந்நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பான் அதில் மிகவும் உறுதியாக நிற்கிறார். இந்தச் சண்டை யில் இரண்டு தரப்பில் எதற்கும் ஆதரவு தராமல் நடுநிலையோடு நிற்போம் என்று கூறியதோடு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் போலந்து தலைநகர் வார்சாவில் அமெரிக்க ராணுவக் கூட்டணியில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் தலைவர் களைச் சந்திக்க ஜோ பைடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். பலரும் கலந்து கொள்ளும் அந்தக்கூட்டத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது போன்ற நிகழ்வை மேற்கொள்ளலாம் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது. நேட்டோவில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில் அதன் தலைவரான பிரதமர் விக்டர் ஓர்பான் வந்தேயாக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அமெரிக்கா மற்றும் அதன் நெருக்கமான கூட்டாளி நாடுகளின் இந்த எண்ணம் நிறைவேறவில்லை. எந்தவித அதிகாரங்களும் இல்லாத ஜனாதிபதி கடாலின் நோவாக்கை அனுப்பி வைத்திருக்கிறார்கள். விக்டர் ஓர்பான் தன்னைச் சந்திக்க வராமல் இருந்தது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைட னுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹங்கேரி யைச் சிக்க வைக்கலாம் என்ற எண்ணம் நிறை வேறாததால் கூட்டம் களையிழந்து போயிருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஹங்கேரியின் வெளி யுறவுத்துறை அமைச்சரான பீட்டர் ஜிஜார்ட்டோ, ”இந்தப் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. போர் நிறுத்தமோ அல்லது அமைதிப் பேச்சுவார்த்தையோ இல்லையென்றால் நிலைமை மோசமாகும். நிலைமையை மோசமாக்கும் வேலையை நாம் செய்துவிடக்கூடாது. போர் நிறுத்தப்பட வேண்டும். நேற்றைய தினத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் வெவ்வேறு இடங்களில் பேசியதைக் கேட்டேன். இருவரும் ஒருவருடன் ஒருவர் அதைப் பேசியிருந்தால் இந்தப் பிரச்சனை முடிந்திருக்கும்” என்றார். தனது கூட்டாளிகள் மத்தியில் உரையாற்றிய ஜோ பைடனின் தொனி வேறு மாதிரி இருந்தது. அதில் அவர் போர் நிறுத்தம் பற்றியோ அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை பற்றியோ பேச வில்லை. ஆனால் நேட்டோ பலமாக இருக்கிறது. சொல்லப்போனால், கூடுதல் பலமடைந்திருக் கிறது என்று போர் தொடர்வதற்கு ஆதரவாகப் பேசினார். ரஷ்யாவின் வெற்றி, நாம் அனை வரும் அடிபணிந்துவிட்டதாகக் காட்டிவிடும் என்று அமைதி உருவாக வேண்டும் என்று நினைக்கும் நாடுகளுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.