ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரக்கோரி தென் அமெரிக்க நாடான பெருவில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்கின்றன. தற்போதைய ஜனாதிபதி டினா போலுவார்ட்டே பதவி விலக வேண்டும் என்றும், நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மேலும் வலுத்துள்ளன.