லண்டன், ஏப்.4- பிரிட்டனில் இஸ்ரேல் அமைத்துள்ள ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இழுத்து மூடக்கோரி நாடு தழுவிய பேரணிகள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியங்களைக் கண்டித்தும் பேரணிகளில் பங்கேற்றவர்கள் முழக் கங்களை எழுப்பினார்கள். லெய்ஸ்டர் நகரில் உள்ள இஸ்ரேலின் ஆயுதத் தொழிற்சாலை முன்பாகக் குழுமிய ஆயிரக்கணக்கான மக்கள், எங்கள் மண்ணில் இத்தகைய தொழிற்சாலைகள் இருக்கக்கூடாது என்று கூறினர். பல்வேறு அமைப்புகள் இந்தப் பேரணிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அவற்றில் பங்கேற்கவும் செய்தன. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பேரணிகளில் பங்கேற்றிருக்கிறார்கள். கிளாஸ்கோ மற்றும் பிரைட்டன் உள்ளிட்ட நகரங்க ளிலும் பெருந்திரள் பேரணிகள் நடந்துள்ளன. தொழிற்சாலை முன்பாகக் குழுமிய போராட்டக்காரர்கள், 30 நாட்கள் காலக்கெடு விதித்து மக்கள் அறிவிக்கை ஒன்றை நிர்வாகத்தி டம் வழங்கினர். அதற்குள் இழுத்து மூடாவிட்டால், தொழிற்சாலையை மக்களே நேரடி நடவடிக்கை மூலமாக மூடுவார்கள் என்று அதில் குறிப்பிட்டி ருக்கிறார்கள். மே 1 ஆம் தேதி வரையில் மக்கள் காத்திருப்பார்கள் என்றும், அதன் பிறகும் தொழிற்சாலை இயங்கினால் மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நாடு முழுவதுமிருந்து மக்கள் திரட்டப்பட்டு, மூடுவிழா நடத்துவோம் என்று அறிவிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுதம் தயாரிக்கும் நிறுவனமான எல்பிட், பிரான்சின் தேல்ஸ் ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து லெய்ஸ்டரில் உள்ள தொழிற்சாலை யை இயக்கி வருகிறது. பிரிட்டனுக்குத் தேவை யான ஆளில்லா விமானங்களைத் தயாரித்துத் தருகிறோம் என்று சொல்லி துவங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து, ஏராளமான தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அத்தகைய ஏற்றுமதி இஸ்ரேலுக்கே அதிகமான அளவில் செய்யப்படுகிறது. இந்தத் தளவாடங்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்று அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இஸ்ரேலின் எல்பிட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களை சோதித்துப் பார்க்கும் இடமாக ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். முற்றுகைக்கு ஆளாகியுள்ள பாலஸ்தீன மக்களைக் கொல்ல, சொந்த இடங்களை விட்டு வெளியேற்ற மற்றும் அவர் களை ஒடுக்கவே இந்தத் தளவாடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதைப் பாலஸ்தீன நடவடிக்கைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆலைகள் மூடல்
மனித குலத்திற்கு எதிரானவை இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் என்று பிரிட்டனில் போராடும் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதத் தொழிற்சாலைகளுக்கு அனைத்து உதவிகளையும் பிரிட்டனில் செய்து வரும் ஏடிஎஸ் குழுமத்தின் அலுவலகங்களைக் கடந்த வாரம் மூடும் நிலைக்குப் போராட்டங்கள் கொண்டு சென்றன. மக்களின் முற்றுகை அந்த நிறுவனத்தின் கதவுகளுக்குப் பூட்டுப் போட வைத்தது. மேலும், 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டங்களால் லண்டன் மற்றும் ஓல்தாம் ஆகிய இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்டி ருந்த ஆயுதத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இவையிரண்டும் இஸ்ரேலியர்களால், இஸ்ரே லிய ராணுவத்திற்காக நடத்தப்பட்டவையாகும். ஆனால், லெய்ஸ்டர் நகரில் உள்ள ஆலைகளை மூட மறுத்து வருகிறார்கள். மே 1 ஆம் தேதிக்குப் பிறகு போராட்டக்காரர்களால் நடத்தப்பட விருக்கும் நேரடி நடவடிக்கை, முதன்முறையாக நடத்தப்படுகிறது. எல்பிட் ஆலைதான் இஸ்ரேல் பயன்படுத்தும் ஆளில்லா விமானங்களில் 85 விழுக்காட்டைத் தயாரித்து தருகிறது.