world

ஹஜ் பயணம்:  10 லட்சம் பேருக்கு அனுமதி

மெக்கா, ஏப்.10- இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 10 லட்சம் பயணிகளுக்கு சவூதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை ஹஜ் பெரு நாள் எனவும் அழைக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது.இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 10 லட்சம் யாத்ரீகர்களுக்கு அனுமதி அளிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.  இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து வரும் யாத்ரீகர்கள் கொரோனா எதிர்மறை பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும். சில கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.