கோவை, ஆக.19- நீட் தேர்வு பயத்தினால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கட சாமி சாலை கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது 19வயது மகள் சுபஸ்ரீ, கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தனியார் அகாடமியில் பயின்று வந்தார். கடந்த முறை தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இந்த வருடம் எப்படியா வது வெற்றிபெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதனால் தேர்வு நடந்தால் வெற்றி பெறுவோமாஎன சுபஸ்ரீ பெரும்மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதைத்தொட ர்ந்து செவ்வாயன்று மாலை அவரது வீட்டில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.