what-they-told

img

ஜன. 6 பள்ளிகள் திறப்பு

சென்னை, ஜன. 3- அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரை யாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப் பட்டது. புத்தாண்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஜனவரி 4 ஆம் தேதி சனிக்கிழமை திறக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 2 ஆம் தேதி தொடங்கிய வாக்கு எண்ணிக்கை  3 ஆம் தேதியும் நீடித்ததால் திட்டமிட்டபடி பள்ளி கள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை யடுத்து, அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை (ஜன.6) பள்ளிகள் திறக்கப்படும்  என்று பள்ளிக் கல்வித்துறை அறி வித்துள்ளது.

;