what-they-told

img

விரைவில் மருத்துவப் பொருளாக ‘கோமியம்’ அறிவிப்பு

மத்திய பாஜக அமைச்சர் பிதற்றல்

கோவை,செப்.8- கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படவுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே  கூறியது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.  மத்திய பாஜக அமைச்சர்கள் ‘வித்தியாச வித்தியாசமான’ அறிவிப்பு களை வெளியிட்டு வருகின்றனர். பழங்காலத்து புராண கற்பனைக் கதைகளை அறிவியல் என்று பேசிப் பிதற்றி வருகின்றனர். இந்த வரிசையில் மேலும் ஒரு அமைச்சர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையில் அதி நவீன புற்றுநோய் சிகிச்சைக் கருவிகளை தொடங்கி வைத்துப் பின்னர்  அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “நாடு முழு வதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரி கள் துவங்கப்பட உள்ளன. அதன் மூலம் அடுத்த  5 ஆண்டுகளில் 1 லட்சம்  மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்படும்.   சேலம், மதுரை, தஞ்சை மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் அவற்றில் மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப்படும். கோமி யத்தை மருத்துவப் பொருளாக அறி விக்கும் வகையில் ஆய்வுகள் நடை பெற்று வருகிறது. யோகா, சித்தா, யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.