மதுரை,ஆக.6- சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அங்கு எலும்புகளாலான எழுத்தாணிகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம் அப்போதைய காலகட்டங்களில் படிப்பறிவு இருந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. ஆனால் முழுமையான அகழாய்வுக்குப் பின்னர்தான் உண்மைகள் தெரியவரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.