what-they-told

img

விஏஓ காலிப் பணியிடங்களில் ஓய்வுபெற்றோரை நிரப்புவதா?

சென்னை, ஜுன் 21- தமிழகத்தில் காலியாக உள்ள  கிராம நிர்வாக அலுவலர் பணியிடங் களை ஓய்வுபெற்றவர்களை வைத்து நிரப்ப முடிவெடுத்துள்ள தமிழக அர சுக்கு வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வெள்ளியன்று மதுரையில் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமை யில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் மொத்தம் 12,616 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இதில் 2896 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை தகுதியான இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்பும்வரை தற்காலிக மாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் களை வைத்து நிரப்ப தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான அர சாணையை கடந்த பிப்ரவரி 25ம் தேதி  தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் முதல்கட்ட மாக 1000 பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது என செய்திகள் வருகின்றன. கடந்தாண்டு 9351 குரூப் 4 ப யிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ கத்தில் படித்து முடித்த இளைஞர் களுக்கு வேலையில்லாத நிலை அதி கரித்துள்ளது. வேலைக்காக இளைஞர் கள் சென்னை, கோவை போன்ற மாநக ரங்களுக்கும், பெங்களூர், மும்பை உட்பட வெளி மாநிலங்களுக்கும் செல் வது அதிகரித்து வருகிறது.

இந்நிலை யை தமிழக அரசு உணராமல், பொறுப் பற்ற முறையில் முடிவுகள் மேற்கொள் வது வன்மையாக கண்டிக்கதக்கது என இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.  ஆகவே  ஓய்வுபெற்ற அரசு ஊழியர் களை வைத்து கிராம நிர்வாக அலு வலர் பணியிடங்களை நிரப்பும் முயற்சி யை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்;  தொடர்ந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை கொண்டு  காலி யாக உள்ள அரசு  பணியிடங் களை நிரப்பு வதை நிறுத்திடவேண்டும்;  காலியாக உள்ள 2896  பணியிடங்களுக்கு முறைப்படி  தேர்வு அறிவித்து  இளைஞர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். பல்வேறு  துறைகளில் அனைத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமெனவும் வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.