சென்னை, அக்.20- தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவி யரசன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் புவியர சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கைக் கடல் பகுதியில் வளி மண்டல காற்றுச் சுழற்சி நிலவுகிறது. தமி ழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை எதுவும் கிடையாது. கனமழை பெய்யும் இடங்களை ஆரஞ்சு நிறத்தில் குறிப்ப தாக விளக்கம் அளித்தார்.