what-they-told

img

காற்று மாசுபாட்டால் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுதில்லி,நவ.1- காற்று மாசுபாட்டால் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்களில் ஒன்றாக தில்லி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு தில்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளதால் ஏராளமானோர் மூச்சு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தே காணப்படுகிறது.   இதனால் நவம்பர் 5 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்றும்  அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அண்டை மாநிலங்கள் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

தில்லியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டிற்கு அண்டை மாநிலங்களே காரணம் என்று முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் தனது டிவிட்டரில், அரியானா மற்றும் பஞ்சாப் அரசுகள், தங்கள் மாநில விவசாயிகளை வேளாண் குப்பைகளை எரிக்கும்படி வற்புறுத்துவதால் தில்லி காற்று மாசுபாட்டின் மையமாக மாறியுள்ளது. இத்தகைய நச்சு கலந்த வாயுக்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது அவசியம். இதனால் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 50 லட்சம் முக கவசங்கள் வழங்கும் பணியை துவக்கி உள்ளோம். தில்லி மக்கள் அனைவரும் இத்தகைய முக கவசங்களை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.  விவசாயிகள் குப்பைகளை எரிப்பதை தடுக்கும்படி பஞ்சாப் மற்றும் அரியானா  முதல்வர்களுக்கு கடிதம் எழுதும்படி பள்ளி குழந்தைகளையும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

;