புதுதில்லி, ஜூலை 12 கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால் 62 சதவீத குழந்தை கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ள தாக ஒரு சர்வேயில் தெரியவந்துள் ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் எழுந்துள்ள சவால்கள், மக்களின் முன்னுரிமைகள் குறித்து குழந்தைகள் உரிமைகளுக்காக செயல்படுகிற ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, நாடு முழுவதும் சர்வே நடத்தி உள்ளது. இதில் இந்தியா முழுவதும் 7,235 குடும்பங்களில் இந்த சர்வே நடத்தப் பட்டுள்ளது. வட பிராந்தியத்தில் 3,827 குடும்பங்களும், தென் பிராந்தி யத்தில் 556 குடும்பங்களும், கிழக்கு பிராந்தியத்தில் 1,722 குடும்பங்களும், மேற்கு பிராந்தியத்தில் 1,130 குடும்பங்களும் இதில் பங்கேற்றன.
இந்த சர்வேயின் முடிவில், கொரோ னா வைரஸ் தொற்று பரவலால் 62 சதவீத வீடுகளில் உள்ள குழந்தை கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளனர். இது சர்வேயில் பங்கேற்ற மொத்த குடும்பங்களில் ஐந்தில் மூன்று பங்கு ஆகும். ஐந்தில் இரு பங்கு குடும்பத் தினரின் குழந்தைகள் பள்ளிகளில் மதிய உணவு பெறவில்லை. மேற்கில் 52 சதவீதத்தினரும், வடக்கில் 39 சதவீதத்தினரும், தெற்கில் 38 சதவீதத் தினரும், கிழக்கில் 28 சதவீதத்தினரும் மதிய உணவு பெறவில்லை. நகர்ப் புறம், கிராமப்புறம் என பார்க்கிற போது, நகர்ப்புறங்களில் 40 சதவீதத் தினரும், கிராமப்புறங்களில் 38 சதவீத த்தினரும் மதிய உணவுபெறவில்லை. சர்வேயில் கலந்து கொண்டவர் களில் 40 சதவீதத்தினரால் குடும்பத்தி னருக்கு போதுமான உணவு வழங்க முடியவில்லை, 10 பேரில் 8 பேர் தங்களது குடும்பங்கள் வரு மானத்தை இழந்துள்ளதாக தெரிவித் துள்ளனர். 14 சதவீத குடும்பங்களில் ஸ்மார்ட் போன் இல்லை அல்லது ஆன்லைன் கல்விக்கு துணை நிற்கும் வகையில் இணையதள வசதி இல்லை.
10 குழந்தைகளில் 4 குழந்தைகள் வீடுகளில் படித்துக்கொண்டே விளையாடுவதாகவும், பள்ளிகள் மூடலால் நான்கில் ஒரு குழந்தை வேலை பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஐந்தில் இரு பங்கு குடும்பத் தினர், குழந்தைகளின் கல்விக்காக எந்தவிதமான கல்வி உதவியை பள்ளிக்கூடத்திலோ, கல்வித்துறை யிலோ பெறவில்லை என தெரிவித்துள்ளனர். கிராமப்புறங் களில் 42 சதவீத குடும்பங்களிலும், நக ர்ப்புறங்களில் 40 சதவீத வீடுகளிலும் எந்த கல்வி உதவியையும் பெற வில்லை. சர்வேயில் பங்கேற்ற குடும்பங் களில் நான்கில் மூன்று பங்கு குடும்பங் களில் வாழ்வாதார இழப்பு ஏற்பட்டு ள்ளதாகவும், 80 சதவீதத்தினர் பண நெருக்கடியில் இருப்பதாகவும் தெரி வித்தனர். 45 சதவீத குடும்பங்களில் கடன், அடமானம் போன்றவற்றின் மூலம் பணம் பெறத் தொடங்கியுள்ளனர். பத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டு பொருட்களை, சொத்துக்களை விற்க தொடங்கி இருக்கின்றனர்.