what-they-told

img

உலக புலிகள் தினம்: வளமான காட்டின் குறியீடான புலிகளின் அழிவை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக

புலிகளின் வரலாறு வலி மிகுந்தது. 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு முன்பு உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன. இதில் சுமார் 80 சதவிகி தம் புலிகள் இந்தியாவில் வசித்தன. 18-ம்  நூற்றாண்டின் இறுதியில் தான் புலிகளுக் கான அழிவு காலம் பெரியளவில் தொடங்கி யது. புலி வேட்டையை வீரத்தின் அடையா ளமாக இந்திய மன்னர்கள் கருதினார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் இது வீர விளை யாட்டாக ஊக்குவிக்கபட்டது. அதிக புலி களை வேட்டையாடிக் கொல்பவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் வேட்டை சங்கங்களும் பெருகின. ஜெய்பூர் மகாராஜாவின் வேட்டை சங்கத்திற்கு கிரேக்க மன்னர் ஜார்ஜ் உள்பட உலகம் முழுவதும் மன்னர்கள், இளவரசர்கள் விருந் தினர்களாக வந்து தங்கி, புலிகளை வேட் டையாடி உள்ளனர்.  1950ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 18,000 புலிகள் இருந்த நிலையில்  1960ஆம் ஆண்டுகளில் இவை 15,000 மாக குறைந் தது. மத்திய அரசு முதன்முதலில்  1972ஆம் ஆண்டில் புலிகளுக்கான கணக்கெடுப்பை நடத்தியது. இதில் இந்தியாவில் வெறும்  1,827 புலிகள் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இந்த எண்ணிக்கை அனைவரை யும் அதிர்ந்து போகச்செய்தது. இதனைய டுத்து 1973-ஆம் ஆண்டு “ப்ராஜெக்ட் டைகர்” திட்டம் துவங்கப்பட்டது.  புலிகள்  காக்கப்பட வேண்டிய விலங்கின பட்டிய லில் சேர்த்து, அதற்கான காப்பகங்கள் அமைக்கப்பட்டு புலிகளின் எண்ணிக் கையை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இதன் பின்னர் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான கணக்கெ டுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்து 2,226-ஆக இருகின்றது. 

நாட்டின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை கடந்த முப்பதே ஆண்டுக ளில் வேட்டையாடுதல், விஷம் வைத்து கொல்லுதல் போன்ற காரணங்களினால் ஏறத்தாழ பதினேழு மடங்கு குறைந்துள் ளது. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அக்காடு அனைத்து வகையிலும் வளமான காடாக கருதப்படும். பிறந்த இரண்டு மாதங் கள் வரை புலிக்குட்டிகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு. நான்காம் மாதத்தில் இருந்து எட்டாம் மாதம் வரை குட்டிகள் தாயு டன் நீண்ட தூரம் பயணித்து, மோப்பம் பிடிப் பது, முன்னங்கால்களால் சண்டையிடுவது, தனது பலத்திற்கேற்ற இறை விலங்கினை தேர்வு செய்வது, அவற்றை வேட்டையாடி வீழ்த்துவது, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, காட்டெருது போன்ற ஆபத்தான விலங்குக ளிடம் காயம்படாமல் நேர்த்தியாக வேட் டையாடுவது போன்றவை தாய்ப்புலியால் குட்டிகளுக்கு கற்றுத்தரப்படும். இதன் பின் னர் தாய்ப்புலி தனது குட்டிகளை தனித்து செயல்பட அனுமதிக்கும். வனத்தில் மனிதர் களால் நடத்தப்படும் அத்துமீறல்களால் புலி களின் வாழ்விடம் சுருங்கி வருவதால், அவை காப்பகங்களை விட்டு காப்புக்காடு களிலும் வாழ துவங்கி விட்டன. 

இதன்படி கோவை வனக்கோட்டத் திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் தற்போது 15ற் கும் மேற்பட்ட புலிகள் இருப்பது வனத் துறை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேட்டுப் பாளையம் வனத்தில் புலிகள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறும் வன உயிரின ஆர்வலர்கள், இங்கு புலிகளின் முக்கிய இரை விலங்குகளான புள்ளிமான், கடமான், காட்டெருது போன்றவை அதிகள வில் இருப்பதே புலிகள் வசிக்க காரணம் என்கின்றனர். அதே நேரத்தில் புலிகள் காப்பகங்களுக்கு மட்டுமின்றி இவை வாழும் பிற வனப்பகுதிகளுக்கும் உரிய சிறப்பு நிதி ஒதுக்கி இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின் றனர். இவை வாழும் காட்டில் இயற்கை சூழல் பாதித்து அதற்கான இரை விலங்கு கள் கிடைக்காவிட்டால் வனத்தை ஒட்டி யுள்ள பகுதிகளில் மனிதர்களால் வளர்க்கப் படும் ஆடு மாடுகளை உணவாக்க முயற் சிக்கும் என்பதால், புலிகள் வாழும் காட்டில் சிறப்புக் கவனம் செலுத்துவது மிக மிக அவ சியம். குறிப்பாக கள்ள வேட்டை முற்றிலு மாக தடுக்கப்பட வேண்டும் என்கின்றனர்.  அண்மையில் உத்திரப்பிரதேச மாநி லத்தில் ஊருக்குள் புகுந்து விட்டதாகக் கூறி சிலர் சுற்றிவளைத்து புலியை அடித்தே கொன்றது விலங்கின ஆர்வலர்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது போன்ற சூழல் எங்கும் ஏற்படாத வகையில் இயற்கை யின் உன்னத உயிரினமான புலியினத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

- சரவணபாபு