what-they-told

img

சென்னை ஐஐடி மாணவிகளை ஆபாசமாக படம்பிடித்த பேராசிரியர் கைது

சென்னை,பிப்.20- சென்னை ஐஐடி மாணவிகளை கழிப்பறையில் ரகசிய கேமிரா வைத்து ஆபாசமாக படம் பிடித்த பேராசிரியர் கைதுசெய்யப் பட்டார். சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வுக்கூடத்தில் மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த மாணவிகள் கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கு சுவற்றில் செல்போன் கேமிரா போல் ஒன்று தெரிவதை கண்டு அதிர்ச்சி யடைந்து, கூச்சலிட்டுள்ளார்.  சத்தம் கேட்டு வந்த நபர்கள் அருகே இருந்த அதே துறையை சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர் அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரை ஐஐடி நிர்வாகத்தினர் காவல்நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

கோட்டூர்புரம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி யதில் அவர் மேற்கு வங்க மாநி லத்தை சேர்ந்தவர் என்றும் ஏரோஸ்பேஸ் துறையில்  உதவி பேராசிரியராக  பணிபுரிந்து வரு வதும், மாணவிகள் கழிவறை யில் உள்ள தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே உள்ள ஓட்டை யின் வழியாக செல்போனை வைத்து, படம்பிடித்தது என்பதும் தெரியவந்தது.  சுபம் பானர்ஜி போனை ஆய்வு செய்த போது அதில் உள்ள அனைத்து வீடியோக்களையும் அவர் அழித்திருந்தது தெரிய வந்தது. அவரது வாக்குமூல த்தின் அடிப்படையில் பெண் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் காவல்துறையினர் சுபம் பானர்ஜி யை  புழல் சிறையில் அடைத்த னர். நீதிமன்ற விசாரணைக்காக  செல்போனில் இருந்த வீடியோக் களை மீண்டும் எடுப்பதற்காக தடய அறிவியல் துறையிடம்  செல்போனை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

;