what-they-told

img

கவி மின்னல்கள் - நாகை ஆசைத்தம்பி

கவிதை

இருக்கும் மரத்தை பிடிங்கிவிட்டு
புதிதாக செடி நடும்
கதையாகிவிட்டது
இருப்பவனுக்கு வேலையில்லாமல்
வந்தாரை வாழ வைக்கும்
தமிழனின் நிலை

****
தான் படிக்காவிட்டாலும்
பலப்பேரை
படிக்க வைக்கிறான்
நாளிதழ் போடும் சிறுவன்

****
மனிதன்
புனிதமானவன்தான்
மனங்களை
மதங்கள்
மாற்றம் செய்யாதவரை,,,

****

ஏசியில் உட்கார்ந்து
உணவு உண்பவர்களுக்காக
தூசியில் உட்கார்ந்து
உண்ணுகிறார்
விவசாய தொழிலாளி,,,
***
பலமூட்டை
சிமிண்ட்டுகளின் அர்ப்பணிப்பை
சில மூட்டை
சுண்ணாம்பு மறைத்துவிடுகிறது
வெள்ளையாக்கி,,,
****
ஓநாய்கள்
நாய்கள்போல வேஷமிட்டு
குறைக்கும் நேரத்தில்
குழப்பத்தில் முடிகிறது

*****
எல்லாமே இங்கு
தலைக்கீழாதானே நடைப்பெறுகிறது
வேர்தான் நீரை உறியனுமாயென்ன,,,?
நீர் வேரை உறிஞ்சும் காலமிது,,,!