சென்னை,டிச.21- பிளாஸ்டிக் இல்லா கிறிஸ்துமஸ் என்ற நோக்கத் தின் அடிப்படையில் ஊசி யிலைக் கூம்பு மரக்கன்று களைத் தமிழக அரசின் தோட் டக்கலைத்துறை விற்ப னைக்குக் கொண்டுவந்துள் ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று பெரும்பாலான இல்லங்க ளில் பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்து வைத்திருப்பர். பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசு இத னைக் கவனத்தில் கொண்டு பசுமை மாறா கூம்பு மரங் களை முதன் முறையாகச் சென்னை மாநகரில் விற்ப னைக்குக் கொண்டுவந்துள் ளது. தோட்டக்கலைத் துறை இயக்குநர் அலுவலகம், செம்மொழி பூங்கா உட்பட 5 இடங்களில் ஒரு மரக் கன்று 110 ரூபாய் வீதம் விற் பனைக்கு வந்துள்ளது. பொதுமக்களின் வர வேற்பைப் பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கும் இதனை விரிவுபடுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.