what-they-told

img

தனியார் பள்ளிகளில் கட்டணம் வாங்கக் கூடாது: கேரள முதல்வர்

திருவனந்தபுரம், ஏப்.12- கொரோனா பாதிப்பின் பின் னணியில் சுயநிதி பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யக்கூடாது எனவும், ஊழி யர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் சனி யன்று செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:

தனியார் துறையில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது ஏற்க னவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாம் பெரிய துயரங்களை எதிர் கொள்ளும் தயாரிப்பில் உள்ளோம். மற்ற மாநிலங்களுக்கு உதவுவது குறித்து இப்போது சிந்திக்க வில்லை என ஒரு செய்தியாளரின் கேள்விக்கு பதிளித்த முதல்வர் கூறினார். துயர்துடைப்பு ஆணை யம் உட்பட விமர்சித்து அச்சமூட்டும் செய்திகளை பொறுப்பானவர்கள் வெளியிடுவது சரியல்ல என முதல் வர் குறிப்பிட்டார்.

;