காவல்துறை எச்சரிக்கை
சென்னை, மார்ச் 14- செல்போனில் குழந்தைகள் சம்மந்தமான ஆபாச படம் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது. பேரணியை பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஏ.டி.ஜி.பி. ரவி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெய லட்சுமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஏ.டி.ஜி.பி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் செல்போனில் வைத்து இருந்தாலே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்சோ சட்டத்தில் இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவிலே தமிழகத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைவாக உள்ளது. சென்னை நகரில்தான் பெண்க ளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகள் முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்க ளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் பட்டியல் ஒவ்வொரு காவல் நிலைத்திலும் ஆவணப்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆலோசனை மையங்கள் துவக்கப்பட உள்ளன. பெண்களுக்கு எதி ரான குற்றங்களை தடுக்க பல்வேறு உத்திகளை காவல்துறை கையாண்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்க ளுடன் இணைந்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
“குழந்தைகள் ஆபாச படத்தை செல்போனில் வைத்தி ருந்தாலே குற்றம்” என போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகபட்ச தண்டனை வழங்க வும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். 2,000 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது விரைவில் விசாரணை துவங்கப்பட உள்ளது. ஆபாச படம் குற்றம் தொடர்பாக அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஜி.க்க ளுக்கு சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆபாச படங்களை அனுப்பியவர்கள் விவரங்களை காவல் துறைக்கு தெரி விக்க வேண்டும். புகார் அளிக்கும் பட்சத்தில் விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவர்கள் விவரங்கள் ரகசிய மாக வைக்கப்படும். குற்றமில்லாத மாநிலமாக தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.