கூகுள் நில அதிர்வு எச்சரிக்கைகளை ஆண்ட்ராய்டு செல்போன் பயனர்களுக்கு வழங்கும் அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நில அதிர்வு செயல்பாடு குறித்து நிகழ்நேரத்தில் ஏதேனும் ஆரம்ப அதிர்வுகளைக் கண்டறிந்தால் விரைவான எச்சரிக்கைகளை அனுப்பி ஆன்ட்ராய்டு போனில் விழிப்பூட்டலை வழங்கும்.
அதன்மூலம் பேரிடருக்கான தயார் நிலையை மேம்படுத்தி, நில அதிர்விலிருந்து உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதாகவும் உறுதியளிக்கும்.
கூகுள் நிறுவனம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய நில அதிர்வு மையத்துடன் இணைந்து இந்தியாவில் இந்த அம்சத்தைச் செயல்படுத்தும்.
இந்த அம்சம், 5.0 மற்றும் அதற்கு மேல் வெர்ஷனில் மட்டும் செயல்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் எப்படிச் செயல்படுகிறது?
நில அதிர்வின் ஆரம்ப அதிர்வுகளை ஆண்ட்ராய்டு போனில் உள்ள சென்ஸார் கண்டறியும் போது, இந்தத் தரவை மத்திய சேவையகத்திற்கு அனுப்புவதாக கூகுள் குறிப்பிடுகிறது.
ஒரே பகுதியில் உள்ள பல போன்கள் ஒரே மாதிரியான நடுக்கத்தைக் கண்டறிந்தால், நிலநடுக்கத்தின் மையப்பகுதி மற்றும் அளவு உட்பட அதன் பண்புகளை சர்வரால் மதிப்பிட முடியும்.
நில அதிர்வின் ஆரம்ப அதிர்வுகளை ஆண்ட்ராய்டு போனில் உள்ள சென்ஸார் கண்டறிந்து, அந்தத் தரவை மத்திய சேவையகத்திற்கு அனுப்பும்.
அதைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை அருகிலுள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு விரைவாக விழிப்பூட்டல்களை அனுப்புகிறது. இந்த விழிப்பூட்டல்கள் இணையத்தில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும், மேலும் சில வினாடிகளுக்கு முன் பல பயனர்களைச் சென்றடையும்.
விழிப்பூட்டல்கள் பயனர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பேசும் பல்வேறு மொழிகளில் பயனர்களின் ஆண்ட்ராய்டில் கிடைக்கின்றன.