technology

img

டுவிட்டரில் ஏப்ரல் 1 முதல் எடிட் வசதி அறிமுகம் - யாருக்கு தெரியுமா?

சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் ‘எடிட்’ வசதியை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறது.
உலகளவில் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பெரும்பாலும் தங்கள் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம் டுவிட்டரில் எடிட் வசதி இல்லாதது தொடர்ந்து பயனாளர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்தது வந்தது. ஆனால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும்(எடிட்) வசதி உள்ளது.  ஆனால் எடிட் வசதி இல்லாததால் பெரும்பாலானோர்  டுவிட்டரை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டி வந்தனர். 
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்துவதாக டிவிட்டர் அறிவித்தது. இருப்பினும், முட்டாள் தினமான அந்நாளில் இது பொய் என செய்திகள் வெளியான நிலையில், டிவிட்டர் நிறுவனம் உண்மையிலேயே அந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் விரைவில் இந்த வசதி ‘புளூ டிக்’ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளது.
முன்னதாக, இதுகுறித்து டிவிட்டர் தரப்பில், பதிவை திரும்ப மாற்றும் வசதி இருந்தால் பதிவில் நம்பகத்தன்மை இருக்காது தெரிவிக்கப்பட்டது குறிப்பிட்தக்கது.