செங்கல்பட்டு,பிப்.11- செங்கல்பட்டு அடுத்த பொத்தேரி பகுதியில் தனி யார் உணவு விடுதிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த 5 சிறு வர்கள் பணிபுரிவதாக தனி யார் தொண்டு நிறுவனத் திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உமாமகேஸ்வரி ஆலோ சனைப்படி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கள் தனியார் உணவு விடு தியில் சோதனை மேற் கொண்டனர். இந்த சோதனையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களும், நேபாளைச் சேர்ந்த ஒரு சிறுவனும் பணிபுரிவது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் 9 மாதங்களாக அங்கு பணி புரிந்தது தெரிந்தது. இதனையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி என்.வசந்த லீலா 5 சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களி டம் ஒப்படைக்கவும், சிறு வர்கள் பணியாற்றிய தற்கான ஊதியத்தை தொழி லாளர் நலத்துறை மூலம் பெற்றுத் தரவும், சிறு வர்களை பணியில் அமர்த் திய உணவு விடுதி உரிமை யாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் உத்தரவிட்டார். சிறுவர்களை பெற்றோரி டம் ஒப்படைக்கும் வரை செங்கல்பட்டு அடுத்துள்ள ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசினர் சிறப்பு இல்லத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவல கத்தின் மேற்பார்வையில் பாதுகாக்க உத்தரவிடப்பட்டு ள்ளது.