tamilnadu

img

மாசற்ற தீபாவளியை கொண்டாட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

செங்கல்பட்டு, அக். 25- விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு  வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று ஆகியவை பெரு மளவில் மாசுபடுகின்றன. பட்டாசு  வெடிப்பதால் எழும் அதிகப்படி யான ஒலி மற்றும் மாசினால், மக்கள்  குறிப்பாக சிறு குழந்தைகள், வய தான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதி கர்கள் உடல் அளவிலும், மனதளவி லும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.  உச்சநீதிமன்றம் தனது ஆணை யில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும்,  இரவு 7 முதல் 8 மணி வரை  மட்டுமே பட்டாசுகளை வெடிப்ப தற்கு நேரம் நிர்ணயம் செய்து  அனுமதி வழங்கியது. இந்த  ஆண்டு தீபாவளிப் பண்டிகை யன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி  வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அறிவுறுத்தி யுள்ளது. பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனால் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமைப் படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை செயலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறைச் செயலர், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சம்பந்தப் பட்ட அனைத்து துறை அரசு அலு வலர்களைக் கொண்டு வெவ்வேறு  குழுக்கள் அமைத்து உச்சநீதி மன்ற ஆணையின்படி நடவடிக்கை  எடுக்கவும் அனைத்து  மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல்  பேணிக் காப்பது நம் ஒவ்வொரு வரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்க் கண்டவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.