அரசு ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல் தொடுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. மாவட்டத் தலைவர் முஹம்மது உசேன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில செயலாளர் வாசுகி, மாவட்டச் செயலாளர் தாமோதரன், பொருளாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர்.