செங்கல்பட்டு, செப்.4- காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்காக ‘சிந்தடிக்’ டென்னிஸ் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு ள்ளது. இதனை அண்மை யில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமங்களின் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் திறந்து வைத்தார். இந்நிலையில், எஸ்.ஆர். எம் சிந்தடிக் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நடை பெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் 64 பேரும், இரட்டை யர் பிரிவில் 20 பேரும், கலப்பு இரட்டையர் பிரிவில் 12 பேரும் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.ஆர்.எம் கல்வி குழுமங்களின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி பரிசு வழங்கினார். விளையாட்டு இயக்குனர் முனைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்ட னர்.