tamilnadu

img

கழிவு நீரை லாரிமூலம் கொட்டிவருபவர்கள் நடவடிக்கை எடுத்திட   கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம்  மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள  குடியிருப்பு பகுதிகளில் உள் கழிவு நீர்த் தொட்டிகளிருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் கழிவு நீரை லாரி உரிமையாளர்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கால்வாய்களில் திறந்து விட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு விடப்படும் கழிவு நீர் கால்வாய் மூலம் ஏரியில் கலப்பதால் ஏரியில் உள்ள தண்ணீரும் மாசடைந்து வருகின்றது. சாலையோரத்தில் இவ்வாறு கழிவு நீரை லாரிமூலம் கொட்டிவருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட  வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.