tamilnadu

அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் ஆட்சியரிடம் மனு

செங்கல்பட்டு,பிப்.17- தேவாத்தூர் ஊராட்சி யில், ஏரிக்கு அருகில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர்  கட்டித்தரக் கோரி பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற் குட்பட்ட தேவாத்தூர் கிராம ஊராட்சியில் ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளி அருகே ஏரி உள்ளது. பள்ளி யைச் சுற்றி சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் மாண வர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படு கின்றனர். இதனால் பள்ளி யின் சேர்க்கை எண்ணிக்கை குறைவதாகவும் கூறப்படு கிறது. இது குறித்து, ஆதி திரா விட நலத்துறை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தர கோரி மனுக்கள் கொடுக் கப்பட்டுள்ளது. மேலும்,  கிராம சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச் சுவர் கட்ட எந்த விதமான நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை.  இதனைத் தொடர்ந்து அப்பகுதி கிராம இளை ஞர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு  புகார் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். பள்ளிக் குழந்தை களுக்கு ஏதாவது விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பே சுற்றுச் சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்த னர்.