தி.மலையில் தொற்று 470
திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது.
4 மருத்துர்களுக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் அரசு, தயார் மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேருக்கும், 2 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
கடலூரில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சிவராமன், செல்வமணி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 13 லட்ச ரூபாய் மதிப்பிலான 37 சவரன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கடையடைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்ததால் அனைத்து கடைகளும், முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு
திருப்பத்தூர் மாவட்டம் மற்றபள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதூர் நாடுமலை அடிவார குமரன் நகர் பகுதியில் மதுபான கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை விபத்தில் 2 பேர் பலி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்க ஊனைமேட்டூர் மற்றும் காருங்காளி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (29), ராஜசேகரன்(32) ஆகியோர் மோட்டர் பைக்கில் ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த சங்கர் நகர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, டிப்பர் லாரி ஓட்டுனர் ஸ்ரீனிவாசனை கைது செய்தனர்.