‘தேசிய கல்விக் கொள்ளை வரைவு அறிக்கை - 2019’ மீதான தெளிவரங்கம் செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் நடைபெற்றது. வாலிபர், மாணவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டத் செயலாளர் இ.சங்கரதாஸ் தலைமை தாங்கினார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ்கஜேந்திரபாபு தேசியக் கல்வி கொள்கையின் சாராம்சங்களை விளக்கிப் பேசினார். தமுஎகச மாவட்டத் தலைவர் சுபா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழன், செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்ட பலர் பேசினர்.