செங்கல்பட்டு, பிப்.2- பெண் கல்வியை வலி யுறுத்தும், வகையிலும் பிளாஸ்டிக் பயன்பாடினை குறைக்கும் வகையிலும் ‘மாரத்தான் - 2020’ ஓட்டப் போட்டி செங்கல்பட்டை அடுத்த மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி சார்பில் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டம் 21 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ. 3 கி.மீ என 4 பிரிவுகளில் நடை பெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் மற்றும் ரெனால்டு தரக்கட்டுப்பாட்டு தலைவர் ராமகிருஷ்ணன், வேர்ல்ட் சிட்டி நிறுவன வர்த்தக தலைவர் வைபவ் மிட்டல் ஆகியோர் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 21 கி.மீ., 10 கி.மீ, 3.கி.மீ. ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டி யில் பங்கேற்று முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தவர்க ளுக்கும், மகளிர் பிரிவின ருக்கும் ரூ 3.30 லட்சம் மதிப்பி லான பரிசுகள் வழங்கப் பட்டது, மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்ப வர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப் பட்டன.