tamilnadu

மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை மீண்டும் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

செங்கல்பட்டு, அக்.16-  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திப்பிற்காக  மாமல்ல புரத்தில் சாலையோரம் அகற்றப்பட்ட கடைகளை மீண்டும் அமைக்க அனும திக்க வேண்டும் என வலியுறு த்தி முறைசாரா தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க ப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர்  மாமல்லபுரத்தில் அக்டோபர் 11 ,12 ஆம் தேதி சந்தித்து பேசினர். இதற்காக காஞ்சி புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவலர்கள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  இந்நிலையில், கடற்கரை கோயில் மற்றும் கடற்கரைக்குச் செல்லும் சாலையோரம் பல்வேறு அழகு சாதன பொருட்கள், சிற்பங்கள், கடல்சார்ந்த பொருட்கள், அலங்கார பொருட்கள் மற்றும் தின்பண்ட கடைகள் என  150க்கும் மேற்பட்ட கடை களை அகற்ற மாவட்ட ஆட்சி யர் பொன்னையா உத்தர விட்டிருந்தார்.   இதனைத் தொடர்ந்து  சாலையோர கடைகளின் உரி மையாளர்கள் கடைகளை கடந்த 2 வாரங்களாக மூடி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்ப வழங்கினர்.  பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி சந்திப்பு முடிந்த பிறகு மாமல்லபுரத்திற்கு வழக்கம் போல் சுற்று லாப் பயணிகள் வரத்து வங்கியுள்ளனர்.  இந்நிலையில் செவ்வா யன்று சில வியாபாரிகள் கடைகளை மீண்டும் அமைத்துள்ளனர். அப்போது பேரூராட்சி நிர்வாகம் காவல் துறை உதவியுடன் கடைகளை அப்புறப்படுத்தியுள்ளது. பின்னர் முறைசாரா தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் நிர்வாகி முரளி தலைமையில்  வியாபாரிகள்  மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘கடந்த 30 ஆண்டுகளாக மாமல்லபுரம் மேற்கு ராஜவீதியில்  சாலையோர  வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்திவருகின்றோம். சீன, இந்தியத் தலைவர்கள் வருகையை ஒட்டி  சாலை பராமரிப்பு பணிக்காக  பேரூராட்சி நிர்வாகத்தால்  எங்கள் கடைகளை  எங்கள் ஒப்புதலுடன் தற்காலிகமாக அகற்றக் கோரினார்கள். நாங்களும் உடன்பட்டு  செப்டம்பர் 29 முதல்  கடைகளை அகற்றினோம்.  இப்போது அரசு நிகழ்ச்சி முடிந்துவிட்டதால்  மீண்டும் வழக்கம் போல் கடை வைத்து நடத்த  அனுமதிக்க வேண்டும்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.