tamilnadu

அனுமந்தபுரத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல்

செங்கல்பட்டு, டிச.11- செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்த புரத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள்  துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த  20 ஆண்டு களுக்கு மேலாகச் செயல்பட்டு வருகின்றது.  இங்கு பயிற்சியின் போது பயன்படுத்திய வெடி பொருட்கள் மற்றும்  உதிரிபாகங்கள் அனுமந்தபுரம் மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழுந்து கிடக்கும். இவற்றி அப்பகுதி மக்கள் சேகரித்து அதில் உள்ள பித்தளைப் பொருட்களை விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை  துப்பாக்கி பயிற்சி நடை பெற்றுள்ளது. துப்பாக்கி பயிற்சி மையத்தி லிருந்து சில வெடி பொருட்களை அனுமந்த புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது வெடி ஒன்று கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் ராமகிருஷ்ணன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் ஆய்வு செய்தார்.  அப்போது, விபத்துக்கு ள்ளான ராமகிருஷ்ணன் வீட்டில்  60 க்கும் மேற்பட்ட வெடி பொருட்கள் இருந்தது. இதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  அனுமந்தபுரத்தில் 8 க்கும் மேற்பட்ட வர்கள் வெடி பொருட்கள் எடுக்கச் சென்று வெடி விபத்தில் உயிரிழந்தனர். துப்பாக்கி பயிற்சி மையப்பகுதி அருகே யாரும் செல்லக்கூடாது என்று தடை இருந்தாலும் பலர் அங்கு சென்று வெடி பொருட்களை எடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் பயிற்சி நடக்கும் போது என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே நாங்கள் வாழ்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.