tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: ஆக.31க்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் பேச்சுவார்த்தையில் சர்க்கரை ஆலை நிர்வாகம் ஒப்புதல்

செங்கல்பட்டு, ஆக. 19 - கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய  நிலுவை தொகை 8.54 கோடி ரூபாயை, ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் வழங்க நட வடிக்கை எடுப்பதாக மதுராந்தகம் கூட்டு றவு சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரி வித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகம் அடுத்த படாளத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை, நடப்பாண்டு கரும்பு வழங்  கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 8.54 கோடி ரூபாயும், 2016 முதல் 19 ஆண்டு வரை வழங்க வேண்டிய எஸ்ஏபி தொகை 11.25 கோடி ரூபாயையும் வழங்காமல் உள்ளது. ஊரடங்கால் அவதிப்படும் விவசாயி களுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆக.15 முதல் ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டத்தை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்த திட்டமிட்டுள்ளது என்ற  செய்தி தீக்கதிர் நாளிதழில் செவ்வா யன்று (ஆக 18) வெளியானது.

இந்த செய்தியின் எதிரொலியாக புத னன்று (ஆக.19) ஆலை நிர்வாகம், விவசாயி கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மது ராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா,  காஞ்சிபுரம் வட்டச் செயலாளர் இ. லாரன்ஸ், கரும்பு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பெருமாள், விவ சாயிகள் எட்டியப்பன், கெம்பு, தாண்ட வப்பிள்ளை, குப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், விவசாயி களுக்கு வழங்க வேண்டிய 2019-20ம் ஆண்டு அரவை பருவத்தின் நிலுவைத் தொகை 8.54 கோடி ரூபாயை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வழங்கப்படும். 2015-16,  2016-17அரவை பருவத்திற்கு மாநில அரசு  அறிவித்த பரிந்துரை விலை 11.25 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியவுடன் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கப்ப டும் என எழுத்துப் பூர்வமாக நிர்வாகம் உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கம் அறிவித்த காத்திருக்கும் போராட் டம் தற்காலிமாக ஒத்தி வைப்பதாக சங்க  நிர்வாகிகள் தெரிவித்தனர்.