செங்கல்பட்டு, மார்ச் 14 - கொரோனா போன்ற தொற்று நோய்களுக்கு உடனடியாக தடுப்பூசி உருவாக்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி தயா ரிக்கும் தொழிற்சாலையை மூடு வதைத் தவிர்க்க வேண்டும் என வும் தொடர்ந்து நடத்திட நடவ டிக்கை எடுத்திட வேண்டும் எனத் தொழிற்சாலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்க ழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட திருமணி கிராமத்தில் எச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் (எச்.பி.எல்), எச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங் கிணைந்த தடுப்பூசி வளாகத்தை உருவாக்கியுள்ளது. தேசிய முக்கி யத்துவம் வாய்ந்த இந்த திட்டம் ரூ. 594 கோடி அமைக்கப்பட்டுள்ளது , இது வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பே மூடப்ப டும் நிலையில் தற்போது உள்ளது. இத்தொழிற்சாலையில் பணி யாற்றிய சுமார் 200 ஊழியர்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாக்கப்பட்டுள்ளது. புதிய தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக அமைக் கப்பட்ட விலையுயர்ந்த, அதிநவீன உபகரணங்கள் துருப்பிடித்து செயல்பாட்டுத் திறனை இழந்து வருகின்றன. இந்நிலையில் இத்தொழிற் சாலையைத் தொடர்ந்து நடத்திட நிதி ஒதுக்கிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினரும் மாநிலங்களவை உறுப்பின ருமான டி.கே.ரங்கராஜன் எம்பி கடந்த மாதம் தொழிற்சாலையை ஆய்வு செய்த பின்னர் பாரத பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தொழிற் சாலையில் பணியாற்றும் தொழிலா ளர்கள் பாரத பிரதமருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கொரானா உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுக்குத் தடுப்பு மருந்து தயாரிக்க ஆய்வு செய்திடும் வகையில் அதிநவீன உப கரணங்கள் கொண்டு அமைக்கப் பட்டுள்ள இந்த தொழிற்சாலை துவக்க நிலையில் உள்ளது. இத் தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் நல்வாழ்வு இயக்கம் ஆய்வு
இந்நிலையில் வெள்ளியன்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக் கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், பொதுச் செயலா ளர் மருத்துவர் எஸ்.காசிலிங்கம் நிர்வாகிகள் மருத்துவர் வா.பிரமிளா, ஞானகுரு, கருணாநிதி, சிவா, தேவி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர். உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்ட னர். தலைமை நிர்வாக அலுவலர் மருத்துவர் வி.விஜயனிடம் தொழிற்சாலையின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் மாநிலத் தலைவர் ரெக்ஸ் சற்குணம் செய்தியாளர்களிடம் கூறுகை யில் துவக்க நிலையிலேயே நிறுத்தப் பட்டுள்ள இத்தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்திட மத்திய அரசு நிதி ஒதுக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், தமிழக அரசு இத்தொழிற் சாலையை ஏற்று நடத்திட முன்வர வேண்டும். அதுவரையிலும் ஊழி யர்களுக்குச் சம்பளம் வழக்கிடுவ துடன், இடமாற்றம், லேஆப் போன்ற வற்றைத் தவிர்த்திட வேண்டும். தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி ஊழியர்களு டன் இணைந்து போராட்டங்களை நடத்திட இருக்கின்றோம் என்றார்.