செங்கல்பட்டு, டிச.23-செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட சூனாம்பேடு ஊராட்சியில் 13 கிராமங்கள் உள்ளன. இதில் இல்லீடு கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 13 கிராமங்களை உள்ளடக்கிய சூனாம்பேடு முதல்நிலை ஊராட்சியில் இருந்து இல்லீடு கிராமத்திற்கு போது மான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சூனாம்பேடு முதல்நிலை ஊராட்சியில் இருந்து இல்லீடு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் திங்களன்று (டிச.23) நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸிடம் கோரிக்கை மனு வழங்கினர்.