tamilnadu

img

திறந்தவெளியில் கொட்டப்படும் கொரோனா வார்டு குப்பைகள் தொற்று பரவும் அச்சத்தில் மக்கள்

செங்கல்பட்டு, ஆக. 17 - செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை கொரானா வார்டு கழிவு,  குப்பைகள் பாதுகாப்பின்றி திறந்த வெளி யில் கொட்டப்படுகிறது. இதனால் நோய்த்  தொற்று பரவும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டில் செயல்படும் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்க ளுக்கு சிகிச்சை அளிக்கவும், அதுதொடர் பான மருத்துவ பரிசோதனைகளை மேற் கொள்ளவும் மருத்துவமனையின் ஒரு பகுதியை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை  அளிக்கும் பிரிவாக மாற்றி தடுப்புகள் அமைக்  கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவி லியர்கள் பயன்படுத்தும் கவச உடைகள், குப்பைகள் உள்ளிட்டவைகளை பாதுகாப்  பாக வெளியேற்ற எவ்வித ஏற்படுகளும் செய்  யப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இத னால், பாதுகாப்பான முறையில் வெளியேற்றி  அழிக்க வேண்டிய கொரோனா வார்டு மருத்துவ கழிவு, குப்பை மற்றும் கவச உடை கள் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தி டம் புகார் தெரிவித்தால், கொரோனா தொற்று  உள்ளதா என்று மருத்துவ பரிசோதனை பணி களில் பயன்படுத்தப்பட்ட கழிவுகள்தான்.

அதனால் தொற்று ஏற்படாது என அலட்சியமாக கூறுகின்றனர். பரிசோதனைகளில் பலருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலை யில், அங்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மூலம் பிறருக்கு தொற்று பரவாது என கூறு வது சரியல்ல. சென்னையில் கொரோனா மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக கொண்டு சென்று எரிக்கும் நிலையில், நிர்வா கத்தின் அலட்சியமான பதில் அதிர்ச்சி அளிக்கி றது என்று நோயாளிகளின் பாதுகாவலர் ஒருவர் கூறினார். மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி குவிந்து கிடக்கின்றன. மேலும் நோயாளிகள் பயன் படுத்திய முகக்கவசங்கள், கையுறைகள் என  மருத்துவமனை முழுவதும் சிதறிக் கிடக்கி றது. அவற்றை மருத்துவமனை நிர்வாகம் உட னடியாக பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.