மாமல்லபுரம், அக். 19- சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கடற்கரை கோவில், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை ஆகிய இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். தலைவர்கள் வரு கைக்காக அழகுபடுத்த ப்பட்ட அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதி, கடற்கரை கோவில், ஐந்து ரதம் ஆகிய இடங்களை காண ஆர்வ முடன் வந்த வண்ணம் உள்ள னர். இந்நிலையில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றிப் பார்க்க சனிக்கிழமையன்று (அக். 19) முதல் கட்டணம் வசூலிக்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது. அதன்படி வெண்ணை உருண்டை பாறை அருகே டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டி ருந்தது. இதில் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளி நாட்டு சுற்றுலா பயணி களுக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ஐந்து ரதம், கடற்கரை கோவில் ஆகியவற்றை சுற்றிப் பார்க்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெண்ணை உருண்டை பாறையை பார்க்கவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து தொல்லி யல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிரதமர் மோடி - சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வரு கையையொட்டி சுற்றுலா இடங்கள் அழகுபடுத்த ப்பட்டு சீர் செய்யப்பட்டன. இதில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றி யுள்ள பகுதிகளில் கொரியன் புல் தரைகள் அமைக்க ப்பட்டது. இது போன்று பல வசதிகள் செய்யப்பட்டன. இதையடுத்து வெண்ணை உருண்டை பாறை பகுதியை கூடுதல் கவனத்து டன் பராமரிப்பு செய்வ தற்காக கட்டணம் வசூ லிக்கப்படுகிறது” என்றார்.