tamilnadu

img

காவல் நிலைய பிணையில் வெளிவர லஞ்சம் வாலிபர் சங்க போராட்டத்தையடுத்து உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை

மதுராந்தகம், ஆக. 16- காவல் நிலைய பிணையில் வெளிவர 5  ஆயிரம் லஞ்சம் வாங்கும் உதவி ஆய்வா ளரை கண்டித்து ஞாயிறன்று (ஆக.16) சித்தா மூர் காவல்நிலையம் முன்பு வாலிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மரு வத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்டு சித்தா மூர் காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு  உதவி ஆய்வாளராக வெங்கடேசன் உள்ளார்.  இவர் குற்றம் சாட்டப்பட்டோரை காவல் நிலைய பிணையில் விடுவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர தேவைக்காக வெளியே செல்லும் மக்களிடம் இருசக்கர வாகனங்களை பறி முதல் செய்து, அவற்றை திரும்ப ஒப்படைக்க  லஞ்சம் பெறுகிறார். காவல் நிலையத்திற்கு  வரும் மக்களை ஒருமையில் பேசி அவமரி யாதை செய்கிறார் என்று அப்பகுதி மக்கள்  குற்றம் சாற்றி வருகின்றனர். இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலு வலகத்திலிருந்து ஊர்வலமாக சென்று சித்தாமூர் காவல் நிலையம் முன்பாக கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை யடுத்து  மதுராந்தகம் காவல் துணை கண்கா ணிப்பாளர் மகேந்திரன், சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த பேச்சுவார்த்தையில், உதவி ஆய்வா ளர் வெங்கடேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சித்தாமூர் காவல் நிலை யத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்வ தாகவும் உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புரு சோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் மபா. நந்தன், ஒன்றியச் செயலளார் பாக.சத்திய மூர்த்தி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியச் செய லாளர் கு.அசோக், மதுராந்தகம் ஒன்றிய செய லாளார் ஜீவானந்தம், செய்யூர் வட்ட நிர்வாகி  குலவிளக்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.