tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தானம் முகாம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இந்தலூர் கிராமத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் 45 பேர் ரத்த தானம் செய்தனர். அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், சித்தாமூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகம்மது உசேன், செய்யூர் வட்டத் தலைவர் ராமு, வட்ட செயலாளர் வேல்முருகன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மபா.நந்தன், செயலாளர் க.புருசோத்தமன், ஒன்றிய நிர்வாகி குலவிளக்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் நடைபெற்ற முகாம்கள் வாயிலாக 257 யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.