‘‘நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது, இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று மஜ் லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி கூறியுள்ளார். “அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையை பாஜகஅரசு உடைக்கிறது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.