tamilnadu

img

மதவெறியர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர்.... தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை

ஹைதராபாத்;
மதக் கலவரங்களில் ஈடுபட முயல்வோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப் படுவார்கள் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் குறிப்பிட்டுள் ளார்.தெலுங்கானா மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது. இக்கூட்டம் பிப்ரவரி 20-ஆம் தேதி வரைநடைபெற உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அப்போதுதான், மதக்கலவரங்களில் ஒடுக்கப்படுவார்கள் என்று அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

“தெலுங்கானா மாநிலம், மத நல்லிணக்கத்தின் சின்னமாக திகழ்கிறது. மாநிலத்தில் அமைதி தவழ்கிறது. இந்தச்சூழலில், இங்கு மதக்கலவரத்தில் ஈடுபட முயல்வோர்மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்” என்று தமிழிசை சவுந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார்.“தெலுங்கானா மாநிலம்மிகக்குறுகிய காலத்திலேயே வளர்ச்சிப் பாதையைநோக்கி செல்கிறது. சிலதுறைகளில் முன்னோடியாகவும் திகழ்கிறது. மின்சாரம், தண்ணீர் பிரச்சனைகளில் இருந்து தெலுங்கானா மீண் டெழுந்துள்ளது. 24 மணி நேரமும் விவசாயத்துக்கு தரமான மின்சாரம் வழங்கப் பட்டு வருகிறது” என்றும்உரையில் அவர் தெரிவித் துள்ளார்.

;