tamilnadu

img

சிபிஎம், மாதர் சங்கம் சார்பில் மக்களுக்கு உணவு வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கொரோனா  ஊரடங்கை ஒட்டி  மக்கள் வேலை இழந்து உள்ளனர்.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் மலைப்பட்டி ,நல்ல குற்றாலபுரம் தெரு பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே .அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.திருமலை நகர செயலாளர் வி.ஜெயக்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்
 

;