ஸ்ரீபெரும்புதூர்,டிச.4- ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் மழை நீர் கலந்து செம்மண் கலரில் குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதிபடு கின்றனர். ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் வரும் நீரையை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக குடிநீரில் மழை நீர் கலந்து செம்மண் நிறத்தில் வருகிறது. இதனால் அந்த நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.