ஸ்ரீநகர்:
எதிர்க்கட்சிகளுக்கு ‘தேசவிரோதிகள்’ முத்திரை குத்துவதன் மூலம், வேலையின்மை, பணவீக்கப் பிரச்சனைகளை பாஜக திசைத் திருப்புவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கியிருந்த, சிறப்பு உரிமைகளை கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று மத்திய பாஜகஅரசு ரத்து செய்தது. மாநில அந்தஸ்தையும் பறித்துக் கொண்டது. தலைவர்களையும் சிறையில் அடைத்தது.இந்நிலையில், “இழந்த உரிமைகளை மீண்டும் அடைந்தே தீருவோம்” என்று தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள்ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாடு, அவாமி தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் அண்மையில் ஓரணியில் திரண்டு தீர்மானம் நிறைவேற்றின. ஸ்ரீநகர் குப்கர் சாலையிலுள்ள பரூக் அப்துல்லா இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், ‘குப்கர் தீர்மானம்’ என்றும் அழைக்கப்பட்டது.இந்நிலையில், குப்கர் தீர்மானம் நிறைவேற்றிய காஷ்மீர் கட்சிகளை ‘குப்கர் கும்பல்’ (Gupkar gang) என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார். “குப்கர் கும்பல், நாட்டின் மனநிலையுடன் ஒத்துப் போகவில்லை என்றால்,பொதுமக்கள் அதற்கு தக்க பாடம் புகட்டி,ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள்” என்று மிரட்டினார்.
மேலும், குப்கர் கூட்டணி, பாகிஸ்தானுடன் சமரசம் செய்து கொள்வதுடன், சீனாவிடம் இருந்து உதவி பெறுவதாகவும் குற்றம் சாட்டிய அமித்ஷா, இந்த ‘தேசவிரோத அரசியல்’ எண்ணம் கொண்டவர்களுடன் காங்கிரஸ் இணைந்து நிற்கிறதா? என்று தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையிலேயே, அமித்ஷாவுக்கு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.“நீண்டகாலமாகச் செய்துவந்த ஒரு பழக்கத்தைக் கைவிடுவது பாஜகவுக்கு கடினமானதுதான். ஏனென்றால்,மதச்சார்பின்மை அரசியல் பேசுபவர் களை, முன்பு ‘துக்டே துக்டே கும்பல்’என்றும், இந்தியாவின் இறையாண் மைக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என் றும் பாஜக கூப்பாடு போட்டது. இப்போது குப்கர் கூட்டணியை, ‘குப்கர் கும்பல்’ என்று தேசவிரோதியாகச் சித்தரிக்கிறது.‘லவ் ஜிகாத்’, ‘துக்டே துக்டே’ எனும் வார்த்தைகளைத் தொடர்ந்து, தற்போது ‘குப்கர் கும்பல்’ என்ற வார்த்தையை, பாஜக கையில் எடுத்துள்ளது. தேசத்தில் வேலையின்மை, பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இவற்றை மக்கள் மத்தியிலிருந்து திசைத்திருப்பவே இதுபோன்ற சொல்லாடல்களை பாஜக பயன்படுத்தி வருகிறது” என்று மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
உண்மையில், “தங்களை மீட்பர்கள் போலவும், அரசியல் எதிர்க்கட்சிகளைச் சித்தரிக்கப்பட்ட எதிரிகளாகவும் காட்டி இந்தியாவைப் பிளவுபடுத்துவதுதான் பாஜக-வின் திட்டம்” என்றும் மெகபூபா முப்தி சாடியுள்ளார்.இதேபோல தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜகவை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசவிரோதிகள், ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள்” என்பது ஏற்கெனவே அறிந்ததுதான் என்றும், “மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர்‘குப்கர் கும்பல்’ என்று கடுமையான சொற்களில் பேசியதன் பின்னணியில், அவர் எவ்வளவு மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்றும் குறிப்பிட் டுள்ளார்.மேலும், “நாங்கள் கும்பல் இல்லைஅமித் ஷாஜி. நாங்கள் சட்டப்பூர்வமான அரசியல் கட்சிகள். தேர்தலில் வெற்றிக் காகப் போராடும் கட்சிகள். தொடர்ந்து தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்” என்றும் அறிவித்துள்ளார்.