tamilnadu

img

காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து  33 பேர் பலி

 ஸ்ரீநகர், ஜூலை 1- ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில், மினி பஸ் பள்ளத்தாக்கில் உருண்டு விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 33 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கேஷ்வன் என்ற இடத்திலிருந்து கிஸ்த்வார் நகர் நோக்கிச் சென்ற மினிபேருந்து வழியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டது. காலை 7.30 மணி யளவில் ஷிர்க்வாரி என்ற இடத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டு சென்று விழுந்துள்ளது. இதில், மினிபேருந்தில் பயணித்த 33 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மெட்டடோர் ரக மினிபேருந்தில் அளவுக்கு அதிகமாக ஆட்களை திணித்துக்  கொண்டு சென்ற நிலையில் நேர்ந்த இந்த கோர விபத்துக் கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.