tamilnadu

img

குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

வேலூர், ஆக. 24 - வேலூர் மாநகராட்சி 2ஆவது மண்ட லம் சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில்  பகுதியில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு களுக்கு மீட்டருடன் கூடிய குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பணிகள் நிறைவடைந்த பிறகும் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடாத காரணத்தினால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மேலும் மழை பெய்தால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றன. இதனால்  இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும்  அவதிப்படுகின்றனர். மேலும் மழை நீருடன்  கழிவு நீர் கலந்து  தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளி டம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல்  உடனடி யாக சாலையை சீரமைக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.