tamilnadu

வேலூர் விழுப்புரம் முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள்: வேலூர் ஆட்சியர் தகவல்
வேலூர், ஜூன் 19- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக வேலூர் மாவட் டம், அம்முண்டியில் 24 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.  மாற்றுத் தினறாளிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசுகையில், “மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்காமல் அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே முகாம்களை நடத்தி குறைகள் தீர்வு காணப்படுகிறது” என்றார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக காட்பாடியை அடுத்த அம்முண்டி பகுதியில் 24 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு வழங்க ஆவண செய்யப்படுகிறது. வீட்டு மனைப் பட்டா கேட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் தகுதியானவர்களாக இருந்தால் வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

தடையின்றி குடிநீர் விநியோகம்: ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம், ஜூன் 19- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணி யன் தலைமை தாங்கினார். ஊரகம் மற்றும் நகர்புற பகுதி களில் குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறும் பொருட்டு  நிர்வாக அனுமதி அளிக்கப் பட்ட பணிகளின் செயலாக்கம் குறித்து பணிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை முன்னேற்றத்தில் உள்ள பணிகளை உதவி இயக்குநர் நிலையிலான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொறியாளர்கள் மற்றும் இதர பணியளர்கள் கள ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பணிகளை செயல்படுத்தி முடிக்க வேண்டும். பொறியாளர்கள், பணி  மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் ஆகியோருக்கு ஊராட்சிகளை பகிர்ந்து ஒதுக்கீடு செய்து தினசரி குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.  முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை  துண்டிப்பு செய்து அதற்கான அறிக்கையை ஊராட்சிகளின் உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.பேரூ ராட்சி மற்றும் நகராட்சிகளை பொறுத்தவரை பேரூராட்சி களின் உதவி இயக்குனர், நகராட்சி ஆணையர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் உதவி செயற் பொறியாளர்கள், பொறியாளர்கள், நகர்புற ஆய்வாளர்களை வார்டுகள் வாரியாக பொறுப்பு நிர்ணயம் செய்து குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  இந்த அலுவலர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு களில் தினசரி கள ஆய்வு மேற்கொள்ள செய்து குடிநீர் வினி யோகம் செய்வதில் பிரச்சனைகள் குறித்த அறிக்கையை பெற்று பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
 

தண்டவாள பராமரிப்பு: ரயில் சேவையில் மாற்றம்
வேலூர், ஜூன் 19- சென்னை-அரக்கோணம் பிரிவில், கடம்பத்தூர் யார்டில் தண்டவாளப் பராமரிப்புப் பணி நடப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணம்  இடையே ஜூன் 20, 22, 24 ஆகிய தேதிகளில் இரவு 10.10, 10.45  ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள்  திருவள்ளூர்-திருவாலங்காடு நிலையங்கள் இடையே விரைவுப் பாதையில் இயக்கப்படும்.  எனவே, இந்த மின்சார ரயில்கள் செஞ்சி  பானம்பாக்கத்தில் நிறுத்தப்படாது. சென்னை  கடற்கரை-அரக்கோணம் இடையே ஜூன் 19, 21, 23, 25  ஆகிய தேதிகளில் அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்ப டும் மின்சார ரயில் திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே வேகப் பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த  ரயில் செஞ்சி பானம்பாக்கத்தில் நிறுத்தப் படாது.