காலமானார்
வேலூர், அக். 28-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் தெற்கு தாலூக்கா குழு உறுப்பினரும், அரியூர் விஸ்வநாத நகர் பி கிளை செயலாளருமான வி.சோபா அவர்களின் தந்தை எஸ். ராஜேந்திரன் திங்கட்கிழமை காலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு வேலூர் தாலூக்கா (தெற்கு) குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
குழந்தை சுர்ஜித்திற்காக தீபாவளியை தவிர்த்த மலைக்கிராம்
வேலூர், அக். 28- குழந்தை சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்த மலைவாழ் மக்கள் இந்தாண்டு தீபாவளியை கொண்டா டவில்லை. திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அதிகாரிகள் குழந்தையை மீட்க போராடி வருகின்ற னர். இதையறிந்த வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கிராம மக்கள் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட வில்லை. மேலும், குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்க்கப்பட வேண்டும் என கூட்டு பிரார்த்தனை நடத்தினர். அதேபோல் தீபாவளியையொட்டி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு மதிய உணவுடன் இனிப்பு வழங்கப்பட்டது. ஆனால் சுர்ஜித்திற்காக தங்களுக்கு வழங்கிய இனிப்பை கைதிகள் சாப்பிடாமல் தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டல், விடைத்தாள் நகல்பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம், அக். 28- ஆசிரியர் பயிற்சி தேர்வு மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் தெரிந்து கொள்ளலாம். இத்தேர்வின் விடைத்தாள் நகல் பெறவும், விடைத்தாள் களை மறுகூட்டல் செய்ய விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையுடன் சேர்த்து வரும் 30ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு 275 ரூபாய் மற்றும் ஆன்-லைன் கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விடைத்தாள் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு 205 ரூபாய் மற்றும் ஆன்-லைன் கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தல்: இருவர் கைது
பொன்னேரி,அக்.28- கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீஞ்சூரை அடுத்த மேலூர் கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிந்திரகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று லாரியில் மணல் எடுத்துக்கொண்டிருந்த வீ.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த சதீஸ், பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஜே.சி.பி. எந்திரம், மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.